அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வருமா?: சுவாமி சந்தேகம்
மதுரை:
தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை நீடித்தால், அடுத்த 6 மாதங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு சம்பளம்வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம்சுவாமி கூறினார்.
இதுகுறித்து மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர் மேலும்கூறியதாவது:
கடந்த திமுக அரசு நிதித்துறையைச் சரியாகக் கையாளாததால், தற்போது தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும்மோசமாகியுள்ளது. இந்தச் சிக்கலைத் தீர்க்க வழிகாணமுடியாமல் தற்போதைய அதிமுக அரசும் திகைக்கிறது.
தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக ஆலோசனை நடத்தி, நிதிநிலைமையைச் சீர்செய்ய வேண்டும். மத்தியில்தற்போதைய மதவாத பாரதிய ஜனதா ஆட்சியை அகற்றிவிட்டு, மதசார்பற்ற அரசை அமைப்பதற்கு நான்தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். அந்த முயற்சி வெற்றிகரமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.
பெரியாறு அணைப் பிரச்சனையில், வெளிநாட்டு நிபுணர்களின் ஆய்வு தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டுக்குகேரள அரசு தெரிவித்துவிட்டது. எனவே 142 அடி உயரத்திற்கு அணையில் நீரைத் தேக்கி வைக்கலாம் என்றுஇந்திய நிபுணர்கள் அளித்த அறிக்கையை கேரள அரசு நம்புகிறது என்று எடுத்துக் கொள்ளலாம் என்று சுவாமிகூறினார்.












Click it and Unblock the Notifications