வாஜ்பாய்-புஷ் இன்று சந்திப்பு
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று (வெள்ளிக்கிழமை) இரவுபேச்சுவார்த்தை நடத்துகிறார்.
நேற்று அமெரிக்க அதிகாரிகளுடன் அவர் பேசும்போது காஷ்மீரில் பாகிஸ்தானின் தீவிரவாதிகளின்நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். புஷ்சுடன் நடத்தப் போகும் பேச்சுவார்த்தையிலும் இந்த விவகாரம் தான்முக்கிய இடம் வகிக்கும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள தாக்குதல் குறித்தும், இந்திய-அமெரிக்க உறவுகள்குறித்தும் இருவரும் விவாதிப்பர்.
முஷாரபும் அமெரிக்கா வருகை:
ஐ.நா. சபையில் உரையாற்றுவதற்காக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பும் நாளை அமெரிக்க வருகிறார்.ஆனால், எந்தவொரு நிலையிலும் முஷாரப்பை அமெரிக்காவில் சந்திக்கப் போவதில்லை என்று வாஜ்பாய்கூறியுள்ளார்.
இருந்தாலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் நடக்கும் சார்க் மாநாட்டின்போது, வாஜ்பாய்-முஷாரப்சந்திப்பு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு வாஜ்பாயுடன் சென்றுள்ள வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங் இதைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications