For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

20 சதவீத போனஸ் தரும் வரை போராட்டம் தொடரும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

20 சதவீத போனஸ் தரும் வரை பஸ் ஸ்டிரைக் தொடரும் என போக்குவரத்து ஊழியர்களின் கூட்டுப் போராட்டக்குழு அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம்அவசரமாகக் கூடியது.

திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் செ.குப்புசாமி, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு. தலைவர் செளந்தர்ராஜன், காங்கிரஸ் தொழிற் சங்கமான ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் லட்சுமணன்,பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற் சங்கத் தலைவர் குருமூர்த்தி, எச்.எம்.எஸ். தொழிற்சங்கப் பிரதிநிதிகள்ஆகியோர் தலைமையில் இக் கூட்டம் நடந்தது.

இக் கூட்டத்தில் செளந்தர்ராஜன் தலைமையில் கூட்டுப் போராட்டக் குழு அமைக்கப்பட்டது.

அப்போது செளந்தர்ராஜன் கூறுகையில், இந்தப் போராட்டத்தை அரசு தான் எங்கள் மீது திணித்துள்ளது.வழக்கமாகத் தரும் 20 சதவீத போனஸைக் கூடத் தராமல் தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதுநியாயமில்லாதது. அரசுடன் இப்போது கூட மீண்டும் பேசத் தயாராக இருக்கிறோம்.

ஆனால், 20 சதவீத போனஸ் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X