தமிழக-கேரள எல்லையில் நிலச்சரிவு: 40 பேர் பரிதாப சாவு
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆம்பூரி அருகே பெய்த கடும் மழையின்காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 34 பேர் மண்ணில் புதைந்து இறந்தனர். இதில் 10 பேர்குழந்தைகள், 12 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள்.
தமிழக-கேரள எல்லையில் கருஷிமலா மலையின் மீது இந்தக் கிராமம் அமைந்துள்ளது.இந்தப் பகுதியில் சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது.
இங்கு திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த 50 பேர் 6 வீடுகளில் தங்கியிருந்தனர்.மழையினால் நேற்றிரவு திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் வீடுகளைசுற்றியிருந்த பகுதியில் இருந்த மண்ணை அரித்துச் சென்றது.
இதையடுத்து 6 வீடுகளும் மண்ணில் புதைந்தன. இதில் 34 பேர் மண்ணில் புதைந்துஇறந்தனர். மண்ணில் புதையும்போது அவர்கள் இட்ட ஓலம் அப் பகுதியையே அலறவைத்தது.
உடனடியாக பொது மக்கள் கூடி வந்து மண்ணை அப்புறப்படுத்தி அவர்களை மீட்கமுயன்றனர். ஆனால், காட்டு வெள்ளம் மிக வேகமாக மண்ணை அரித்து வீடுகளைப்புதைத்தது.
இறந்தவர்களில் 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4 பேரின் உடல்கள்இன்னும் மீட்கப்படவில்லை. நிலச்சரிவில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை, சூறவளிக் காற்று, மின்தடை காரணமாக மீட்பு பணிபாதிக்கப்பட்டுள்ளது. போலீசார், ராணுவ வீரர்கள், மற்றும் தீயணைப்பு படையினர் வந்தபின் மீட்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.மீட்பு பணியில் மக்களும் உதவி செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications