For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி: பட்டாசுக் கடைக்கு அனுமதி கொடுக்க லஞ்சம் கேட்ட போலீசாருக்கு சிறை

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

பட்டாசுக் கடை வைக்க அனுமதி கேட்டவரிடம் ரூ.8,000 லஞ்சம் கேட்ட போலீஸ் காண்ஸ்டபிள் ஒருவரை திருச்சிலஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சியைச் சேர்ந்த ரோச் என்பவர், அங்குள்ள உழவர் சந்ததை முன்பு பட்டாசுக் கடை நடத்த முல்லை நகர்போசீாரிடம் அனுமதி கேட்டார். அதற்கு அங்கிருந்த போலீஸ் காண்ஸ்டபிள் லோகநாதன், ரோச்சிடம் ரூ.8,000லஞ்சம் கேட்டுள்ளார்.

பணத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு ரோச் கேட்டுப் பார்த்துள்ளார்.

ஆனால் லோகநாதன் பிடிவாதமாக இருந்திருக்கிறார். இதனால் வெறுப்படைந்த ரோச், லஞ்ச ஒழிப்புத் துறையில்லோகநாதனைப் பற்றி புகார் கொடுத்துள்ளார்.

இதைடுத்து, லஞ்ச ஒழிப்புத்தறையினரின் ரகசியத் திட்டத்தின் படி, உழவர் சந்தைமுன்பாக வைத்து லோகநாதனிடம்ரூ.8,000 ஐ ரோச் கொடுத்துள்ளார். அப்போது அருகில் மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார்லோகநாதனைக் கையும் களவுமாகப் பிடித்து, கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட லோகநாதன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X