தீபாவளி முன் பணம்: சென்னையில் மறியல் செய்த 15 அரசு ஊழியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீபாவளி முன் பணம் கேட்டு சென்னையில் மறியல் போராட்டம் செய்த 15 அரசு ஊழியர்கள் இன்று(திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டனர்.
சென்னை சேப்பாக்கத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள்,பிற்பகலில் தலைமைச் செயலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு போலீஸ் படை அனுப்பப்பட்டது. மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கங்களின் முக்கியப்பிரமுகர்கள் 8 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களுடைய போராட்டம் வலுவடைந்தது. சேப்பாக்கத்தில் 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்மறியல் போராட்டம் செய்தனர். இவர்களில் 7 பேரைப் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications