நியூயார்க் அருகே அமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கி 300 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

நியூயார்க்கிலிருந்து டொமினிக் குடியரசு நாட்டுக்குச் சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஏ-300 ரகபயணிகள் விமானம் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்து கொண்டிருந்த அனைத்துப் பயணிகளும்பலியாகிவிட்டனர்.

நியூயார்க்கில் உள்ள ஜான் எப். கென்னடி விமான நிலையத்திற்கு அருகே இன்று காலை 09.00 மணிக்கு (அமெரிக்கநேரப்படி) அந்த விமானம் நான்கு வீடுகள் மீது வெடித்துச் சிதறி விழுந்தது.

இதில் அந்த நான்கு வீடுகளில் இருந்தவர்களும் இறந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அப்பகுதி முழுவதும் கரும்புகை அடர்ந்து காணப்பட்டது. இருப்பினும், மீட்புப் பணி உடனடியாகத்துவங்கிவிட்டது. மீட்புப் பணிகளுக்காக விரைந்த மூன்று ஹெலிகாப்டர்கள் அந்த இடத்தின் மேல் பறந்துகொண்டிருந்தன.

இதனால் விபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விமானத்தில் 246 பயணிகளும் 9 விமானஊழியர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்விபத்தைத் தொடர்ந்து நியூயார்க் விமான நிலையம் மூடப்பட்டு விட்டது. "லெவல் ஒன்" எனப்படும் எச்சரிக்கைநாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்துள்ளமோசமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்தானா என்பதுஇன்னும் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+