700 புதிய அரசு பஸ் டிரைவர்கள் நியமனம்
சென்னை:
அரசு பஸ்களை இயக்குவதற்காக தற்காலிகமாக 700 டிரைவர்கள் வரை சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டிரைவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். இதேஎண்ணிக்கையில் அரசு பஸ்களுக்கான கண்டக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்றே தங்கள் பணிகளை ஆரம்பிப்பார்கள். இதுகுறித்து, மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகநிர்வாக இயக்குநர் மெய்யப்பன் நிருபர்களிடம் மேலும் கூறும்போது:
20 சதவீத ஊழியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
முன்பதிவு செய்யாத ஊர்களுக்கு பயணிகளின் கூட்டத்தை வைத்து பஸ்கள் இயக்கப்படும். தீபாவளியைமுன்னிட்டு எப்படியும் கூட்டம் அதிகம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இதனால் அதிக எண்ணிக்கையில் பஸ்களை விட மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இவை தவிர வழக்கமான ரூட்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்றார் மெய்யப்பன்.












Click it and Unblock the Notifications