மின், ஊழியர்கள் ஸ்டிரைக் துவங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஸ்டிரைக்கைத் தொடர்ந்து, தமிழக மின் மற்றும் ரேஷன் கடை ஊழியர்களும்இன்று (திங்கள்கிழமை) வேலை நிறுத்தத்தைத் துவங்கினர்.
கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போலவே இந்த ஆண்டும் 20 சதவிகித போனஸ் வழங்கப்பட வேண்டும் என்றுவலியுறுத்தி மின்சாரத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றிரவே இந்தப் போராட்டம் ஆரம்பமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்றிரவு வடசென்னை அனல் மின்நிலையத்தில் 320 மின்சாரஊழியர்களுக்குப் பதிலாக 20 ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர்.
இதற்கிடையே மின்சார ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட படி 8.33 சதவிகித போனஸ் இன்று முதல் வழங்கப்படும்என்று நேற்று அரசு அறிவித்தது.












Click it and Unblock the Notifications