தலிபான் திடீர் தாக்குதலில் 4 நிருபர்கள் பலி
வடக்கு ஆப்கானிஸ்தான்:
வடக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்கும் இடையே நடந்த கடும்போரில் நடுவில் சிக்கி 2 பிரான்ஸ் நாட்டு நிருபர்களும் 1 ஜெர்மன் நாட்டு புகைப்பட நிருபர், அமெரிக்க நிருபர்ஒருவரும் பலியாயினர்.
ஞாயிற்றுக்கிழமை கோட்ஜாபுதீன் என்ற இடத்த்லிருந்து நார்தத்ர்ன் அலையன் படையினர் முன்னேறிச் சென்றனர்.அவர்களின் டாங்கியில் பிரான்ஸ் ரேடியோ இன்டர்நேஷனலைச் சேர்ந்த பெண் நிருபர் ஜோகன் சுட்டான், பியர்சிபில்லெளட் மற்றும் ஜெர்மன், அமெரிக்க நாட்டு நிருபர்களும் சென்றனர்.
தஜிகிஸ்தான் எல்லை அருகே இந்தப் படையினர் மீது தலிபான்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் நிருபர்கள்சென்ற காரும் தாக்கப்பட்டது. உடனடியாக நார்தத்ர்ன் அலையன்ஸ் வீரர்கள் திருப்பித் தாக்கினர். இருதரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
இந்த திடீர் தாக்குதலில் 30 நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் பலியாயினர்.
இதில் ஜோகன் சுட்டான், பியர்சி பில்லெளட் ஆகியோர் குண்டு பாய்ந்து இறந்தனர். அவருடன் அதே டாங்கியில்பயணம் செய்த ஜெர்மன் நாட்டு ஸ்டெர்ன் இதழின் புகைப்பட நிருபரும் இறந்தார். மேலும் ஒரு அமெரிக்கநிருபரும் இறந்தார்.
இவர்களுடன் இருந்த கனடா, ஜெர்மன், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிற நிருபர்களும் புகைப்பட நிருபர்களும்காயமின்றித் தப்பினர்.
இறந்த 4 நிருபர்களின் உடல்களையும் நார்தத்ர்ன் அலையன்ஸ் ராணுவத்தினர் கடும் சண்டைக்கு இடையே மீட்டுதங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஷர்த்தாய் போஸ்டுக்குக் கொண்டு வந்துவிட்டனர். அங்கிருந்து ஹெலிகாப்டர்கள்மூலம் இந்த நான்கு நிருபர்களின் உடல்களும் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேகக்கு கொண்டு வரப்பட்டன.












Click it and Unblock the Notifications