தலிபான்களுக்கு அடி மேல் அடி: மேலும் இரு நகரங்களை இழந்தனர்
தெஹ்ரான்:
தலிபான்கள் வசமிருந்து ஹெராட், குண்டூஸ் நகரங்களையும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் இன்றுகைப்பற்றினர்.
இந்த நகரம் இன்றே பிடிபட்டுவிட்டது. இந் நகரில் பாதுகாத்து வந்த தலிபான்களை நார்த்ர்ன் அலையன்ஸ்படையினர் ஓட ஓட விரட்டியடித்தனர்.
ஹெராட் நகரும் பிடிபட்டது:
அதே போல ஹெராட் நகரையும் நார்த்தர்ன் அலையன்ஸ் கைப்பற்றிவிட்டதாக ஈரான் ரேடியோ தெரிவித்துள்ளது.இன்று காலை இந்த நகருக்குள் அதிரடியாக நுழைந்த நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் நூற்றுக்கணக்கானதலிபான் வீரர்களை சுட்டுத் தள்ளினர்.
ஆயிரக்கணக்கான தலிபான் வீரர்களைக் கைது செய்தனர்.
ஈரானின் ஆதரவு பெற்ற இஸ்மாயில் கான் தலைமையிலான படையினர் இந்த நகரைப் பிடித்துள்ளனர். இஸ்மாயில்கான் இந்த நகரில் முன்பு கவர்னராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்மாயில் கானின் ராணுவம் தங்கள் நகருக்குள் நுழைந்ததை ஹெராட் மற்றும் குண்டூஸ் நகர மக்கள் ஆடிப் பாடிவரவேற்றனர். தங்கள் வீட்டு மாடிகளில் நின்று கொடிகளை அசைத்து இந்த வீரர்களுக்கு வரவேற்பளித்தனர்.
கார்களில் தொடர்ந்து ஹாரன்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் பெரும் மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம் காரணமாக பெரும்பாலான கடைகள்மூடப்பட்டுள்ளன.
தலிபான்கள் மறுப்பு
இதற்கிடையே ஹெராட், குண்டூஸ் நகரங்கள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக தலிபான்கள்கூறியுள்ளனர் என்று அல்-ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications