2000 பஸ் ஊழியர்கள் கைது
சென்னை:
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் இன்று (திங்கள்கிழமை) சிறை நிரப்புபோராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து மாநிலம் முழுவதிலும் 2000 போக்குவரத்து ஊழியர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசுக்கும், போக்குவரத்துத்துறை தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையே நடைபெற்ற போனஸ்பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர் இதனால் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு போனஸ் விஷயத்தில் எடுக்கப்பட்டுள்ள நிலைப்பாட்டை கண்டித்து போக்குவரத்துத்துறைஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள்அறிவித்திருந்தன.
இதையடுத்து திங்கள்கிழமை போக்குரவரத்து ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திங்கள்கிழமை காலை போக்குவரத்துத்துறை ஊழியர்கள் மறியலில் ஈடுபட்ட 2000க்கும் மேற்பட்ட போக்குவரத்துஊழியர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications