For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரூர் அருகே தண்டவாளத்தை தகர்க்கப் போவதாக தமிழக விடுதலை படை மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:

கரூர் லாலாபேட்டை ரயில் தண்டவாளத்தை வெடிகுண்டுவைத்துத் தகர்க்கப் போவதாக தமிழகவிடுதலைப்படையிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளதையடுத்து, போலீசார் தீவிர சோதனையில்ஈடுபட்டுள்ளனர்.

தமிழக விடுதலைப்படைத் தலைவர் மாறன் மற்றும் ரேடியோ வெங்கடேசன், மார்த்தாண்டன் ஆகியோரைவிடுதலை செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் லாலாபேட்டை ரயில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்துத்தகர்த்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது.

லாலாபேட்டை ரயில்நிலைய அதிகாரிக்கு வந்தள்ள இந்த மிரட்டல் கடிதம் பற்றித் தகவல் அறிந்தவுடன், போலீசார்தனிப்படை அமைத்து தீவிரமாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவைக்கொலை செய்வோம் என்று தமிழக விடுதலைப் படையினர் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X