சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் சி.ஐ.எஸ்.எப்.
சென்னை:
வரும் 18ம் தேதி முதல் சென்னை விமான நிலைய பாதுகாப்புப் பணிகளை மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படையினர் மேற்கொள்ளவுள்ளனர்.
விமானத்தைக் கடத்தப் போவதாக கடந்த சில நாட்களாக வந்த மிரட்டல்களையடுத்து, சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சில மாறுதல்களைச் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இங்கு ஏற்கனவே நூற்றுக்கணக்கான கமாண்டோ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணிக்காக வரவுள்ளனர்.
இவர்களுக்கு சிங்கப்பூரில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 42 விதமான சிறப்புப் பயிற்சிகளில்ஈடுபட்டு வரும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள், வரும் 18ம் தேதி சென்னை விமானநிலையத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வார்கள் என்று இதன் தென் மண்டல டி.ஐ.ஜியான சம்பத்கூறினார்.
600 வீரர்களைக் கொண்ட இந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைக்காக, சென்னை விமான நிலையத்தில்நவீன வசதிகளைக் கொண்ட ஒரு தனி கட்டடம் தயாராகி வருகிறது.












Click it and Unblock the Notifications