மாநிலம் முழுவதும் குடும்பத்தினருடன் டிரைவர், கண்டக்டர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாநிலம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சாலை மறியல், தர்ணாபோராட்டம் நடத்தி கைதாகி வருகின்றனர்.

கோவையில் 74 பேரும், பெரம்பலூரில் 150 பேரும், காஞ்சிபுரத்தில் 80 பேரும் கைதாகியுள்ளனர்.

அதே போல வேலூர், சேலம் ஆகிய இடங்களிலும் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தாைகியுள்ளனர்.

நீலகிரியில் 210 பேருந்துகள் தனியார் டிரைவர், கண்டக்டர்களை வைத்து ஓட்டப்படுகின்றன.

சாலை விபத்தில் காயமடைந்த 13 பேர் தேறினர்

கோவில்பட்டி சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 13 பேரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டனர்.

கோவில் பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் என்ற இடத்தில் புதன்கிழமை அரசு பஸ் ஒன்று வேன் மீது மோதியது. இதில் 27பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அத்தனை பேரும் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் குமார் ஜெயந்த்கூறியுள்ளார்.

இவர்களில் 5 பேர் வேனில் பயணம் செய்தவர்கள், 8 பேர் பஸ்சில் பயணம் செய்தவர்கள்.

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ. 50,000

கோவில்பட்டி பஸ் விபத்தில் இறந்த 27 பேரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 50,000 வழங்க முதல்வர் பன்னீர் செல்வம்உத்தரவிட்டுள்ளார்.

படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000 நிதியும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 6000 நிதியும் வழங்க முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+