முஸ்லீம்களுக்கு புஷ் ரம்ஜான் வாழ்த்து
வாஷிங்டன்:
ரம்ஜான் மாதம் தொடங்குவதையொட்டி உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் இஸ்லாம் மதத்துக்கு எதிரான போர் என்று பலநாடுகளிலும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் புஷ்சின் வாழ்த்து முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் ரம்ஜான் மாதத்தில் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின்கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துவிட்டது.
புஷ் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவி வரும் மதம் இஸ்லாம். லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் எங்கள் நாட்டில்வசிக்கின்றனர். இதில் பலர் எங்கள் ராணுவத்திலும் பணியாற்றி வருகின்றனர்.
பல நாடுகள், கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒரு மசூதியில் அவர்கள்அனைவரும் ஒற்றுமையாக வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நடவடிக்கைளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபடும். வான் மூலமும், தரைவழியிலும் உணவுப் பொருள்கள் தொடர்ந்து அனுப்பப்படும். மருந்துகளும் பிற உதவிகளும் தொடர்ந்துவழங்கப்படும்.
ரம்ஜான் மாதத்திலும், வரும் ஆண்டுகளிலும் செல்வமும், நலமும், மகிழ்ச்சியும் நிறைந்து வாழ அனைவருக்கும்வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications