தமிழகத்தில் மழை, மின்னலுக்கு 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. வங்கக் கடலின் வடக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழைக்கு மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.

கோவையில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. திருப்பூர் அருகே மின்னல் தாக்கி ஒருவர்பலியானார். பூசாரிப்பாளையம் என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் வாழை, மிளகு பயிர்கள் மழையினால் சேதமடைந்துள்ளன. சில உப்பளங்களில்தேக்கி வைக்கப்பட்டிருந்த உப்பும் சேதமடைந்தது.

அருமனை என்ற இடத்தில் மின்சார கம்பியை மிதித்த ஒருவர் இறந்தார். கரூர் தரங்கம்பேட்டை என்ற இடத்தில் வயலில் வேலைசெய்து கொண்டிருந்த பெண், மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த பெண், சாலையில் சென்றிருந்த ஒரு பெண் ஆக மொத்தம்3 பெண்கள் மின்னல் தாக்கி இறந்தனர்.

மழை இன்னும் ஒரு நாளைக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+