கோவில்பட்டி விபத்து: சாவு எண்ணிக்கை 28 ஆக உயர்வு
சென்னை:
கோவில்பட்டி பஸ், வேன் விபத்தில் அரசு பஸ் கண்டக்டரும் இறந்த விவரம் தற்போது தெரியவந்துள்ளது. மேலும்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இறந்ததையடுத்து சாவு எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.
பஸ் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கையடுத்து தாற்காலிகமாக டிரைவர், கண்டக்டர்களை நியமித்து அரசுபஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. லைசென்ஸ் இருக்கும் யாரும் வந்து வண்டி ஓட்டலாம். முன் அனுபவம்எல்லாம் தேவையில்லை.
இப்படி ஒரு அனுபவம் இல்லாத டிரைவர் வெறும் கைலியைக் கட்டிக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசுபஸ்ஸை ஓட்டினார். கோவில்பட்டி நாலாட்டின்புதூர் பாலம் அருகே இந்த அரசு பஸ்சும் வேனும் மோதிக்கொண்டதில் 27 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சரியான பாதையில் வந்து கொண்டிருந்த வேன் மீது பஸ்மோதியது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது, விபத்து நடந்த இடத்தில் ஒரு அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டது. அதில் அரசு பஸ் கண்டக்டர்கீதா கிருஷ்ணன் என்றும், அவரது பேட்ஜ் எண் 8827 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அரசு பஸ் கண்டக்டரைப் பற்றிய விவரம் அறிய போலீசார், மருத்துவமனைக்கு தொடர்புகொண்டனர். அங்கு அவர் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த கண்டக்டர் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்துமதுரையிலிருந்து வந்த போக்குவரத்துக் கழக அதிகாரி கிங்ஸ்டன் கனகராஜ், கண்டக்டர் கீதா கிருஷ்ணனின்உடலைப் பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications