தீவிரவாதத்தை ஒடுக்க கடும் சட்டம் அவசியம்- வாஜ்பாய்
டெல்லி:
தீவிரவாதம் மற்றும் மதவாத சக்திகளை ஒடுக்க கடுமையான சட்டத்தின் அவசியத்தை இன்று தொடங்கியஅனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் வாஜ்பாய் விளக்கினார்.
தீவிரவாததத்திற்கு எதிராக நாம் எவ்வாறு கடும் போராட்டம் நடத்திவருகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும்.தீவிரவாதத்தை ஒடுக்குவது என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பாலும், நமது பாதுகாப்புப்படைகளின் உழைப்பாலும், எல்லாவற்றிற்கும் மேலாக நாம் வரையறுத்துள்ள சட்டங்களின் உதவியாலும் தான்முடியும்.
தீவிரவாதத்தை முற்றிலும் அழிக்க நம்மிடம் தற்போது "தடா" வைத் தவிர வேறு எந்தக் கடுமையான சட்டமும்இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் (போடோ)அவசியத்தை அனைவரும் உணர வேண்டும்.
சமீபத்தில் அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்து அனைத்து நாடுகளும், தீவிரவாதிகள்விஷயத்தில் எவ்வளவு கடுமையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளன.
நமது தேசிய சட்டக்குழு தற்போதைய சூழ்நிலையில் தீவிரவாதத்தை ஒடுக்க மிகக்கடுமையான சட்டங்கள்உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்பதுநமது பாதுகாப்புப் படையினர் பல ஆண்டுகளாக கோரி வரும் ஒன்றாகும்.
எனவே இந்தச் சட்டங்களை இயற்றி நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு உங்களுடைய (அனைத்து மாநிலமுதல்வர்களுடைய) கருத்தை இந்தக்கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு வாஜ்பாய் கூறினார்.












Click it and Unblock the Notifications