பஸ் ஊழியர்கள் நாளை குடும்பத்துடன் உண்ணாவிரதம்
சென்னை:
தமிழகம் முழுவதும் நாளையும் (திங்கள்கிழமை) நாளை மறுநாளும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்கள்குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.
போனஸ் கேட்டு வேலை நிறுத்தம் செய்து வரும் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களின் சார்பில்அலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் சி.ஐ.டி.யூ. சங்க நிர்வாகி ஏ. செளந்தரராஜன்நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்துக் கழக ஊழியர்களின் குடும்பத்தினர் மறியல் செய்தனர். அவர்களைக்கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு மறுத்து வருகிறது.
இதனால் வரும் 19 (நாளை) மற்றும் 20ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகத்தொழிலாளர்களின் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருப்பார்கள்.
சென்னையில் திங்கள்கிழமை தாம்பரம் பஸ் நிலையத்திலும், செவ்வாய்க்கிழமை தங்கசாலை மணிக்கூண்டுஅருகிலும் உண்ணாவிரதம் நடைபெறும்.
எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திங்கள்கிழமை முடிவு செய்யப்படும். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திஎந்தப் பயனும் இல்லாததால், இனி அதற்கான வாய்ப்பே இல்லை என்றார் செளந்தரராஜன்.












Click it and Unblock the Notifications