கோவை சிறைக் கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற தந்தை கைது

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

சிறையில் இருக்கும் தன் மகனுக்கு கஞ்சா வாங்கிக் கொடுக்க முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் கமல் ரமேஷ் ஒரு கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றுகோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முத்துச்சாமி தனது மகனைப் பார்க்க சிறைக்கு வந்தார். கமல் ரமேசுக்குக் கொடுப்பதற்காக ஒரு பொரிபொட்டலத்தையும் அவர் கொண்டுவந்தார்.

பொரி பொட்டலத்தைப் பார்த்து சந்தேகமடைந்த சிறை வார்டன்கள் புருஷோத்தமன், மருதையா ஆகியோர்முத்துச்சாமியின் பொரி பொட்டலத்தைச் சோதனை போட்டனர். அப்போது அதற்குள் இரண்டு கஞ்சாபொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து முத்துச்சாமியை ரேஸ் கோர்ஸ் போலீசில் சிறை வார்டன்கள் ஒப்படைத்தனர். முத்துச்சாமியிடமிருந்தகஞ்சா பொட்டலத்தைப் பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+