வீரப்பன் அனுப்பிய கேசட் எதுவும் அரசுக்கு வரவில்லை - பன்னீர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைவது குறித்து அவனிடமிருந்து எந்தக் கேசட்டும் அரசுக்கு வரவில்லை என்றுதமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய பன்னீர்செல்வம் விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
இதுவரை அரசுக்கு எந்த விதமான கேசட்டும் வீரப்பனிடமிருந்து வந்ததாகத் தகவல் இல்லை.
மேலும், வீரப்பனுடைய இந்த வேண்டுகோள் எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியவில்லை.
உண்மையிலேயே வீரப்பன் சரணடைய விரும்பினால், போலீசாரிடம் அல்லது நீதிமன்றத்திடம் சரணடையலாம்.
ஆனாலும், அவர் சரணடைவது குறித்து இதுவரை அரசுக்கு எந்த விதமான தகவலும் வரவில்லை என்றார்பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications