இந்தியாவுக்குள் குவியும் ஆப்கானிஸ்தான் அகதிகள்
டெல்லி:
ஆப்கான் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்திவருவதால் அந்நாட்டு மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள்வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
ஆப்கானில் தாக்குதல் அதிகரித்து வருவதால், அங்கிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக பொதுமக்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்களும், சீக்கியர்களும் ஆவர்.
11,624 பேர் இவ்வாறு அகதிகளாக இந்தியாவுக்குள் வந்துள்ளனர். இன்னும் 500க்கும் மேற்பட்டவர்கள் இங்குவருவதற்காகக் காத்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு மற்ற நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு அளிப்தைப் போல தகுந்த பாதுகாப்பும் மற்றவசதிகளும் செய்து கொடுக்கும்படி இந்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்களுக்குகடிதம் எழுதியுள்ளேன்.
தற்போது இலங்கை மற்றும திபெத் ஆகிய நாடுகளில் இருந்து வரும் அகதிகள் மட்டுமே இந்திய அரசால்கவனிக்கப்படுகிறார்கள். ஆப்கான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களை ஐக்கிய நாடுகள்சபை கவனித்துக் கொள்கிறது.
இவர்களையும் அகதிகளாக கவனித்துக் கொள்ளும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யுமாறு இந்திய அரசிடம்கேட்டுக்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.