For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை-பெங்களூர் ரயிலில் வெடிகுண்டு புரளி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டுள்ளதாக வந்த மிரட்டலைஅடுத்து பெங்களூர் செல்லும் அனைத்து ரயில்களும் சோதனை செய்யப்பட்டன. முடிவில் இந்த மிரட்டல் வெறும்புரளி என்று தெரிய வந்தது.

இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதாவது,

நான் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு துணிக்ககடையில் துணி எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுஎனக்கு அருகில் நின்று கொண்டிருந்த 2 பேர் மர்மமான முறையில் பேசிக் கொண்டிருந்தனர்.

சென்னையிலிருந்து 16ம் தேதி பெங்களூருக்குச் செல்லும் ரயிலில் வெடிகுண்டு வைக்கப் போவதாக அவர்கள்பேசிக்கொண்டனர். அரக்கோணத்தில் வைத்து வெடிகுண்டை வைக்கப் போவதாகவும் அவர்கள் பேசிக்கொண்டனர்.

எனவே முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் எழுதியவர் பெயர், விலாசம் எதுவும் அந்தக் கடித்தில்குறிப்பிடப்படவில்லை.

இருப்பினும் போலீசார் பெங்களூர் செல்லும் அனைத்து ரயில்களையும் அரக்கோணத்தில் வைத்து பெட்டிபெட்டியாகச் சோதனை செய்த பிறகே அனுப்பினர்.

சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை என்பதால், இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மர்மக் கடிதத்தை எழுதியவர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X