மீண்டும் சென்னை மாநகராட்சி தமாகா தலைவராகிறார் வெற்றிவேல்
சென்னை:
சென்னை மாநகராட்சி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக மீண்டும் வெற்றிவேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நேற்று (சனிக்கிழமை) இதை அறிவித்தார்.
கடந்த மாநகராட்சித் தேர்தலை விட தற்போது நடந்த தேர்தலில் தமாகாவுக்குக் குறைந்த இடங்களேகிடைத்துள்ளன.
இதனால் சென்னை மாநகராட்சி தமாகா தலைவராக மீண்டும் வெற்றிவேலைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்றுகட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்தின் தீவிர ஆதரவாளரான ராயபுரம் மனோவைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்என்றும் சிலர் கூறினர்.
ஆனாலும், இறுதியில் வெற்றிவேலே சென்னை மாநகராட்சி தமாகா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்என்று வாசன் கூறினார்.
கடந்த முறை சென்னை மாநகராட்சியில் எதிர்க்கட்சியாக தமாகா இருந்தபோது, தமாகா கவுன்சிலர்களுக்குத்தலைவராக இருந்ததோடு மட்டுமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவராகவும் வெற்றிவேல் இருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications