"குட்காவும் புற்றுநோயும்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலையை உபயோகிப்பதால் வாய்ப்புற்று நோய் வருகிறது என்பதால்தான்இப்பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறும்போது:
பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலையை உபயோகிப்பதால் வாய்ப்புற்று நோய் வருகிறது என்பதுஅனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இருந்தாலும் இவற்றைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.
கடந்த 1994 கணக்கெடுப்பின் படி 10,000க்கு 324 பேர் என்ற விகிதத்தில் வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்டனர்.1967ம் ஆண்டிலோ இந்த விகிதம் 16:10000 என்றுதான் இருந்தது.
மேலும் வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான்என்பது குறிப்பிடத்தக்கது என்றார் செம்மலை.












Click it and Unblock the Notifications