For Daily Alerts
Just In
திமுக ஆட்சியில் பால்வளத்துறைக்கு ரூ. 244 கோடி நஷ்டம்
மதுரை:
திமுக ஆட்சியில் பால்வளத்துறையில் மோசமான நிர்வாகம் காரணமாக ரூ. 244 கோடி அளவுக்கு நஷ்டம்ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் விரகனூர் அருகே ஆவின் பால் பூத்களைத் திறந்து வைத்துப் பேசிய பால்வளத்துறை அமைச்சர்சண்முகசந்தரம் கூறுகையில்,
பல்வேறு துறைகளையும் திமுக அரசு மிக மோசமாக நிர்வகித்தது. இதனால் அனைத்துத் துறைகளிலும் நஷ்டம்ஏற்பட்டு மாநில அரசின் கஜானாவே காலியாகிவிட்டது.
இப்போது அவர்கள் செய்துவிட்டுப் போன குழப்பங்களைத் தீர்க்கும் முயற்சிகளில் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளதுஎன்றார். நிகழ்ச்சியில் சபாநாயகர் காளிமுத்து உள்பட பலர் பேசினர்.
Story first published: Monday, November 19, 2001, 5:30 [IST]