தமிழகத்தில் மேலும் 126 பெண் காவல் நிலையங்கள்
கோயம்புத்தூர்:
தமிழகம் முழுவதும் மேலும் 126 மகளிர் காவல் நிலையங்கள் துவக்கப்படும். இதில் 50 காவல் நிலையங்கள் இந்தஆண்டில் திறக்கப்படும் என்று ஐ.ஜி. திலகவதி கூறினார்.
தமிழக போலீஸ் தலைமையகத்தின் ஐ.ஜியான திலகவதி கோவை வந்தார். நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும். கம்யூட்டர் நெட்வோர்க் மூலம்இந்த காவல் நிலையங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். படிப்படியாக அடுத்த 4 ஆண்டுகளில்இத் திட்டம் செல்படுத்தப்படும்.
காவல்துறைக்கு ரூ.600 கோடி செலவில் நவீன ஆயுதங்கள், கருவிகள், வாகனங்கள் வாங்கப்படும்.
தமிழகம் முழுவதும் மேலும் 126 மகளிர் காவல் நிலையங்கள் துவக்கப்படும். இதில் 50 காவல் நிலையங்கள் இந்தஆண்டில் திறக்கப்படும்.
இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து 1,217 காவல் நிலையங்களிலும் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டரும்,2 பெண் காவலர்களும் நியமிக்கப்படுவார்கள்.
பெண்கள் தொடர்பான வழக்குகளில் போலீசாரின் அணுகுமுறையையும் நடவடிக்கையையும் சீர்படுத்தவும்சிறப்புக் கல்வி அளிக்கப்படும். மாநிலத்தின் 85,000 போலீசாருக்கும் அடுத்த ஓராண்டுக்குள் இந்தக் கல்விஅளிக்கப்படும் என்றார் திலகவதி.












Click it and Unblock the Notifications