வெள்ளை மாளிகையில் ரம்ஜான் விருந்து: அமெரிக்க தூதரும் நோன்பு
வாஷிங்டன்:
அமெரிக்காவில் முக்கிய முஸ்லீம் தலைவர்களுக்கு வெள்ளை மாளிகையில் ரம்ஜான் நோன்பு திறப்பு விருந்து(இப்தார் நிகழ்ச்சி) வழங்கினார் அதிபர் புஷ்.
இஸ்லாம் மதத்துக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாக பின்லேடன் கூறி வரும் நிலையில் அதைஉடைக்கும் முயற்சியாக இந்த விருந்துக்கு ஜார்ஜ் புஷ் ஏற்பாடு செய்திருந்தார்.
அவர்களிடையே பேசிய புஷ், தீவிரவாதத்துக்கு எதிரான உங்கள் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.விரைவில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமைதி கிடைக்கும். தீவிரவாதிகளுக்கு மதமே கிடையாது.கெட்டவர்களுக்கு புனித மாதமும் கிடையாது, புனித நாளும் கிடையாது என்றார்.
இந்த விருந்தின்போது, இமாம் அப்துல்லா முகம்மத் கெளஜ் சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார். இதில் ஜார்ஜ்புஷ்சும் கலந்து கொண்டு வணங்கினார்.
இந் நிகழ்ச்சியில், வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல், பாதுகாப்பு ஆலோசகர் காண்டலீஸ்ஸா ரைஸ்ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நோன்பு இருக்கும் அமெரிக்கத் தூதர்:
பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் வென்டி சேம்பர்லின் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரம்ஜான் நோன்பைதானும் மேற்கொண்டுள்ளார்.
நேற்று அமெரிக்கத் தூதரகத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்திய சேம்பர்லின் இதனைத் தெரிவித்தார்.ரம்ஜானின் புனித நோக்கம் தனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாகவும், இந்த மாதம் முழுவதும் நோன்பிருக்கமுடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ரம்ஜான் மாதத்திலும் ஆப்கானிஸ்தான் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்புக்கிளம்பியுள்ள நிலையில் சேம்பர்லின் நோன்பிருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சேம்பர்லின் கிருஸ்துவர்என்பதும் குறிப்பிடத்தக்கது.