கேசட்டில் உள்ளது வீரப்பன் குரலா?: கண்டுபிடிக்க போலீசுக்கு பன்னீர் உத்தரவு
சென்னை:
சந்தன வீரப்பன் அனுப்பியதாக "நெற்றிக்கண்" ஆசிரியர் ஏ.எஸ். மணி கொடுத்த கேசட்டில் உள்ளதுஉண்மையிலேயே வீரப்பனுடைய குரல்தானா என்று கண்டறியுமாறு போலீசாருக்கு தமிழக முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
தான் சரணடைய தயாராக இருப்பதாக ஆடியோ கேசட் மூலம் "நெற்றிக்கண்" ஆசிரியர் மணியிடம் வீரப்பன்தகவல் அனுப்பியதையடுத்து, கடந்த சில தினங்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே "நெற்றிக்கண்" மணி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பன்னீர்செல்வத்தைச் சந்தித்து, அந்தக்கேசட்டை அளித்தார்.
இதைத் தொடர்ந்து, அந்தக் கேசட்டில் உள்ளது உண்மையிலேயே வீரப்பன் குரல்தானா என்று கண்டுபிடிக்குமாறுமாநில போலீசாருக்கு உடனடியாக உத்தரவிட்டார் பன்னீர்செல்வம்.
போலீசாரிடமிருந்து இதற்கான பதில் வந்த பிறகு, கர்நாடக அரசுடன் இது குறித்து ஆலோசனை செய்வோம்என்றார் பன்னீர்செல்வம்.
சிறப்பு அதிரடிப்படையினரின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற வீரப்பனுடைய கோரிக்கைஏற்கப்படுமா என்ற நிருபர்களின் கேள்விக்கு, முதலில் போலீசாரின் அறிக்கை எங்களுக்கு வரட்டும் என்றுபன்னீர்செல்வம் பதிலளித்தார்.
பஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை:
ஒன்பது நாட்களுக்கும் மேலாக அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மீதுசட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.
இதற்கிடையே பஸ் ஊழியர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் போக்குவரத்துத் துறை அமைச்சர்நயினார் நாகேந்திரன்.












Click it and Unblock the Notifications