புர்ஹாவை கழற்றி எறிந்து காபூலில் பெண்கள் ஊர்வலம்

Subscribe to Oneindia Tamil

காபூல்:

தாங்கள் அணிந்திருந்த புர்ஹாவைக் கழற்றி எறிந்து விட்டு நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் பெண்கள்தலைநகர் காபூலில் ஊர்வலம் சென்றனர்.

தலிபான்களின் ஆட்சியில் இருக்கும்போது, ஆப்கானிஸ்தான் பெண்கள் புர்ஹா இல்லாமல் வீட்டை விட்டுவெளியேறக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

தலிபான்களிடமிருந்து விடுபட்டதற்கான ஒரு அடையாளப் பேரணியாகவே அவர்கள் இவ்வாறு காபூலை வலம்வந்தனர். இவர்களில் முன்னாள் அரசியல்வாதிகளும், ஆசிரியைகளும் அடங்குவர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் இந்தப் பெண்கள் தங்கள் முகத்தையே வெளியில்காட்டுகின்றனர்.

"நாங்கள்தான் காபூல் நகரின் ஹீரோயின்கள்" என்று இந்தப் பேரணியை நடத்திய சொராயா பார்லிக்காஇப்பெண்களை வர்ணித்தார். நமது உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நேரம் இப்போது வந்துள்ளது என்றும்அவர் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்களுடைய சொந்த வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டிருந்த இந்த ஆப்கானியப்பெண்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்து வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.

ஆனால் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இவர்கள் வீட்டில் சிறைபடுத்தப்பட்டதோடு தலிபான்களின்கொடுமைக்கும் ஆளாகியிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+