For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

70,000 அகதிகள் நாட்டுக்குள் வர அமெரிக்கா அனுமதி

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

அடுத்த ஆண்டில் 70,000 அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

செப்டம்பர் 11ம் தேதி நடந்த தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பின் அகதிகள் நாட்டுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது. இப்போது அந்தத் தடையை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நீக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட உத்தரவில், இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டுஅக்டோபர் வரை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் 70,000 அகதிகள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர்.அவர்களுக்கு அடைக்கலம் தரப்படும்.

ஏற்கனவே, 20,000 பேருக்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைஎடுத்துள்ள அமெரிக்கா இன்னும் அவர்களை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இனி இவர்கள்அமெரிக்காவுக்குள் வர அனுமதிக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X