பஸ் ஊழியர்கள் போராட்டம் சட்டவிரோதம்: நீதிமன்றத்தில் அரசு மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைச் சட்டவிரோதமான செயலாக அறிவிக்கவேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் கேட்டுக் கடந்த 13 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தை சட்டவிரோதமான செயலாக அறிவிக்கவேண்டும் என்று கோரி தமிழக அரசு சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் என்.ஆர்.சந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த 13 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்தப்போராட்டத்தை சட்டவிரோதமான செயலாக அறிவிக்க வேண்டும்.

கேரள மாநிலத்தில் இதுபோல போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, கேரள உயர்நீதிமன்றம் அதைச் சட்டவிரோதமான செயல் என்று அறிவித்தது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும்உறுதிப்படுத்தியது.

எனவே தமிழகத்த்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தைச் சட்டவிரோதமான செயலாகஅறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதிசிவசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+