ரூ.164 கோடி முதல் ரூ.2,035 கோடி வரை: அரசு பஸ்களால் ஏற்பட்ட நஷ்டம்
சென்னை:
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களால் ரூ.2,035 கோடி அளவுக்கு அரசுக்குநஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு பஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மயிலாடுதுறையைச் சேர்ந்தராஜசேகரன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் போக்குவரத்துக்கழகங்களில் ஏற்பட்டுள்ள நஷ்டக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது.
1991ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரையிலான நஷ்டக் கணக்கு விவரம்:
1.1991 - ரூ. 164.13 கோடி
2.1992 - ரூ. 185.91 கோடி
3.1993 - ரூ. 236.37 கோடி
4.1994 - ரூ. 284.40 கோடி
5.1995 - ரூ. 325.61 கோடி
6.1996 - ரூ. 532.98 கோடி
7.1997 - ரூ. 843.65 கோடி
8.1998 - ரூ. 1073.02 கோடி
9.1999 - ரூ. 1484.41 கோடி
10.2000- ரூ. 1802.14 கோடி
11.2001- ரூ. 2035.02 கோடி












Click it and Unblock the Notifications