Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் தீர்ப்பு நிறுத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கின் இரு தரப்புவாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில் வழக்கின் தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுதேதிகுறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதலில் சென்னை இரண்டாவது தனி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கின் முடிவில், கடந்த 2000ம் ஆண்டுபிப்ரவரி மாதம் 2ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், செல்வகணபதி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டேவுக்கு 2ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தத் தண்டனையை ரத்துசெய்யக் கோரி ஜெயலலிதா உட்பட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல்மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தினகர் முன்னிலையில் நடைபெற்றது. ஜெயலலிதா சார்பில்கே.கே.வேணுகோபலும், அரசு சார்பில் வெங்கடபதியும் ஆஜராகி வாதாடினார்கள்.

இன்றுடன் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை மறு தேதி எதுவும்குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக நீதிபதி தினகர் அறிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+