For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கக் கடலில் புயல் சின்னம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறிக்கொண்டிருப்பதையடுத்து, தமிழகம் முழுவதிலும் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என்றுவானிலை ஆராய்ச்சி கூறியுள்ளது.

சென்னையில் புதன்கிழமை மாலை முதல் விடியவிடிய பெய்த பேய் மழையால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப்போனது.

சென்னை நகரில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. சில நாட்களாக மழைஅவ்வளவாக இல்லாத நிலையில் புதன்கிழமை காலை முதல் லேசான மழை பெய்து வந்தது.

ஆனால் மாலை 4 மணிக்கு மேல் கருமேகம் திரண்டு மாலையை இரவாக்கியது. மாலை 5 மணிக்கு மேல் கன மழைபெய்யத் தொடங்கியது. போகப் போக வலுத்ததே தவிர மழை நிற்பதாகத் தெரியவில்லை. இரவு 8.30 மணி வரைகன மழை பெய்தது.

அதன் பின்னர் மீண்டும் இரவு 10 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. இரவு முழுவதும் மழை பெய்துகொண்டிருந்தது. காலையில்தான் மழை முற்றிலுமாக நின்றது. தொடர்ந்து மேகமூட்டமாக உள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

இந்தக் கன மழை காரணமாக செங்குன்றம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X