ஓட்டல் சரவண பவன் விவகாரம்... கோடிகள் கை மாறியதா? - போலீசார் மறுப்பு
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் பின்னணியில் பல கோடி ரூபாய்விளையாடியுள்ளதாக ஒரு நாளிதழில் வந்த செய்தியை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன்கடுமையாக மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராஜகோபால் விவகாரத்தில் அதிமுகவுக்குத் தொடர்புஇருப்பதாகவும், பல கோடிகள் கை மாறியுள்ளதாகவும் ஒரு நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது முற்றிலும்உண்மைக்குப் புறம்பானது.
அதிமுக தரப்பில், சரவண பவன் ஹோட்டல் நிர்வாகத்திடம் இலவச சாப்பாடு கேட்டதாகவும், அதற்கு மறுப்புதெரிவித்த காரணத்தால்தான் இதுபோன்ற புகாரை பதிவு செய்யச் சொல்லியதாகவும் அந்த நாளிதழ் தவறுதலாகசெய்தி வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற தவறான செய்திகள் மூலம் காவல்துறைக்கும், பத்திரிகைத் துறைக்கும் இடையே மனக் கசப்பு ஏற்படஇடம் கொடுத்து விடக் கூடாது.
சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில்தான் ராஜகோபால் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர்தேடப்பட்டு வருகிறார் என்றார் முத்துக்கருப்பன்.