For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை பொது வேலை நிறுத்தம்: வன்முறையில் ஈடுபட்டால் பாதுகாப்பு சட்டம் பாயும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளவிருக்கும் பொது வேலைநிறுத்தத்தின்போது வன்முறையில் ஈடுபடுபவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தொடர்ந்து 13 நாட்களாக 20 சதவீத போனஸ் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துக் கழகஊழியர்கள் நாளை பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கு மத்திய-மாநில அரசு ஊழியர்களும், சில அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பொது வேலை நிறுத்தத்தின்போது வன்முறையில் ஈடுபடுபவர்களும், பொதுச் சொத்துக்குச் சேதம்விளைவிப்பவர்களும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசுஎச்சரித்துள்ளது.

இத்தகைய செயல்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும், பொது வேலை நிறுத்தத்தின்போது இயங்கும் அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் மற்றும் வாகனங்களுக்குரோந்து பாதுகாப்பு உள்பட தக்க பாதுகாப்பை வழங்க தமிழகக் காவல் துறைக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X