For Quick Alerts
For Daily Alerts
Just In
பந்த்தை தடுக்க அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை
சென்னை:
பொது வேலை நிறுத்தம் நடைபெறாமல் அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் அமைப்பாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொது வேலை நிறுத்தம் நடந்தால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர். அதைத் தடுக்க வேண்டும்என்றால் அரசு பஸ் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் முடிவு காணப்பட வேண்டும்.
எனவே பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பஸ் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வுகண்டு பொது வேலை நிறுத்தம் நடைபெறாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments
Story first published: Thursday, November 22, 2001, 5:30 [IST]