சென்னை: ஓடும் மின்சார ரயிலில் பெண்ணுக்குப் பிரசவம்
சென்னை:
சென்னையில் மின்சார ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சுக பிரசவம் நடந்தது. அவர் அழகான பெண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரேணுகா தேவி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தாம்பரத்தில்உள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து வீடு திரும்பினார். மின்சார ரயிலில் அவர் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து பெட்டியில் இருந்த அனைத்து ஆண் பயணிகளும் இறக்கி விடப்பட்டனர். பின்னர் ரயிலில் இருந்தபெண்கள் அனைவரும் சேர்ந்து ரேணுகா தேவி பிரசவிக்க உதவினர்.
சிறிது நேரத்தில் ரேணுகா தேவிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் மருத்துவமனைக்குத் தகவல் தரப்பட்டது. ஆம்புலன்சுடன் வந்த மருத்துவமனை டாக்டர்கள்ரேணுகாதேவியையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.