வீரப்பன் வேட்டையில் தீவிரமாகும் தேவாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் டிஜிபி தேவாரம் தலைமையிலான சிறப்பு அதிரடிப்படை குழுவினர் வீரப்பனைத் தேடி தர்மபுரி மாவட்டம் ஒகனேக்கல் மலைப்பகுதியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணி சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இம்முறை எப்படியும்வீரப்பனைப் பிடித்தே தீருவோம் என்ற கங்கனத்துடன் தேவாரம் தலைமையிலான அதிரடிப்படை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சிறுமலைப் பகுதியில் வீரப்பனைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன் பலனாக வீரப்பனின் 3 கூட்டாளிகள் பிடிபட்டுள்ளனர்.அதே நேரத்தில் தர்மபுரி மாவட்டம் ஒகனேக்கல் மலைப் பகுதியில் வீரப்பன் கும்பலின் நடமாட்டம் இருப்பதாக அதிரடிப்படைபோலீஸாருக்கு உளவுப் பிரிவினர் தகவல் தந்தனர். இதையடுத்து தேவாரம் அங்கு காமிட்டுள்ளார்.

தேவாரத்துடன் நூற்றுக்கணக்கான அதிரடிப்படை வீரர்களும் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நெருப்பூர், பாலாறுஆகிய பகுதிகளில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

கொள்ளேகால் பகுதியிலும் கர்நாடக அதிரடிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மாதேஸ்வரன் மலைக்குவீரப்பன் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அங்கும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

வீரப்பனுக்கு உணவுப் பொருள்கள் கொண்டு சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வீரப்பனுக்கு உணவு செல்லும் வழிகளைஅடைத்துவிட்டதாக இரு அதிரடிப் படைகளும் கருதுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+