பந்துக்கு ஆதரவில்லை
சென்னை:
தமிழகத்தில் போக்குவரத்துக் கழங்கள் விடுத்த பந்துக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. அரசுநிறுவனங்கள் இயங்கின. பெரும்பாலான பள்ளிகள் இயங்கின. தனியார் பஸ்கள், மினி பஸ்களும் இயங்கின.
ஆனால், ஆட்டோக்கள் முழு அளவில் இயங்கவில்லை. சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.சி.டி.யூ. போன்ற தொழிற்சங்கங்களைச்சேர்ந்த தொழிலாளர்கள் ஆட்டோக்களை இயங்கவில்லை.
எல்.ஐ.சி., வங்கி, தொலைத் தொடர்புத்துறை ஊழியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், உணவுத்துறை ஊழியர்கள்,ரேஷன் கடை ஊழியர்கள், மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ்கள் ஆகியோர் ஆங்காங்கே பந்துக்கு ஆதரவாக தர்ணாபோராட்டம் நடத்தினர்.
சென்னை: சென்னையில் சில தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. சில பள்ளிகளுக்கும் விடுமுறைஅறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல மேலும் சில பள்ளிகளில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பஸ்கள் மிகக் குறைவான அளவே ஓடின. ஆனால், பள்ளிகள் அனைத்துமேதிறந்திருந்தன. ஆட்டோக்கள் முழுமையாக செயல்பட்டன.
கடலூர்: கடலூரில் நேற்று இரவு முதலே பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. இன்று காலை 10 மணிக்கு மேல் தான்சிறிய அளவில் பஸ்கள் ஓடின. நேரம் செல்லச் செல்ல போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. ஆனால்,நேற்றிரவில் திடீரென அனைத்து பஸ்களும் நின்றுவிட பஸ் ஸ்டாண்டுகளில் நூற்றுக்கணக்கான மக்கள்அவதிப்பட்டனர்.
நெய்வேலி: நெய்வேலி சுரங்கத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இன்று பணிக்குச்செல்லவில்லை. இதனால், சுரங்கப் பணிகள் பாதிக்கப்பட்டன. ஆனால், மின் உற்பத்தி ஏதும்பாதிப்புக்குள்ளாகவில்லை.
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் தான் பந்த் ஓரளவுக்கு ஆதரவுடன் நடந்தது. இங்குள்ள தொழிலாளர்களில்பெரும்பான்மையானவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் என்பதால் பணிக்குச் செல்லவில்லை.
திருப்பூர் ஜவுளி ஆலைகளிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.
எல்.ஐ.சி. ஊழியர்கள் போராட்டம்:
பந்த் நடத்தும் ஊழியர்களுக்கு ஆதரவாக எல்.ஐ.சி. மற்றும் ஜி.ஐ.சி. ஊழியர்கள் இன்று சென்னையில்ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணா சாலை எல்.ஐ.சி. கட்டத்தின் வாசலில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மொத்தத்தில் பந்த் மிக அமைதியாக நடந்து கொண்டுள்ளது. கடைகள் திறந்திருப்பதால் பந்த் நடப்பதாகவே உணரமுடியவில்லை.
பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 2 வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டதால் அதுவும் மக்களுக்குப்பழக்கப்பட்டுவிட்டது. இன்றும் மேலும் சில பஸ்கள் குறைந்து இயங்கினாலும் கூட பாதிப்பு அதிகமாகத்தெரியவில்லை.
ஆனால், பந்த்தினால் தகராறும் வன்முறையும் நடக்கலாம் என அஞ்சிய சில பெற்றோர் தங்கள் குழந்தைகளைபள்ளிகளுக்கு அனுப்பவில்லை.
கைதானவர்கள் விடுதலை:
இதற்கிடையே போராட்டம் நடத்திய கடந்த இரு வாரங்களில் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பஸ்தொழிலாளர்களை படிப்படியாக விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இவர்கள் சென்னை, கோவை, வேலூர், சேலம் ஆகிய நகரங்களில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். பந்த்முடிந்தவுடன் இவர்கள் இன்று மாலை முதல் விடுவிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் நயினார்நாகேந்திரன் கூறினார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications