கலவரத்தில் கொல்லப்பட்ட போலீஸ் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட போலீசார் குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்தை போலீஸ் ஐ.ஜி.பாலச்சந்திரன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் என்ற கிராமத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் போது இருபிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரு பிரிவினரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றுகோரி அந்தப் பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலைக் கைவிட்டுக் கலைந்து போகும்படிபோலீசார் உத்தரவிட்டு, எச்சரிக்கை செய்வதற்காக வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட முயன்றனர்.
உடனே சாலைமறியலில் ஈடுபட்ட கும்பல் போலீசார் மீது மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. இதில்போலீஸ் ஏட்டு முருகன் அரிவாளால் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கொல்லப்பட்ட போலீ"ஸ் ஏட்டு முருகன் குடும்பத்தினருக்கு தமிழக காவல் துறை ஐ.ஜி.பாலச்சந்திரன்ரூ.3 லட்சம் வழங்கினார்.