இந்திய வெப்சைட்களை முடக்கும் பாக். கும்பல்
கொல்கத்தா:
கல்கத்தாவிலிருந்து வெளியாகும் "தி ஸ்டேட்ஸ் மேன்" நாளிதழின் இணையதளத்தை பாகிஸ்தான் ஆதரவுக் கும்பல்முடக்கியது. கிட்டதட்ட 6 மணி நேரத்திற்கு பின்னர் தான் அந்த வெப்சைட் விடுவிக்கப்பட்டது.
தி ஸ்டேட்ஸ்மேன் இணையதளம் நேற்று காலை 10.30 மணியளவில் முடக்கி வைக்கப்பட்டது. சில்வர் லார்ட்ஸ்என்ற பெயரில் யாரோ சிலர் இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தத் தளத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், பாதுகாப்புக் கருதி இந்தத் தளத்தை நாங்கள் முடக்கிவைத்துள்ளோம். எங்களைத் தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி சில்வர்லார்ட்ஸ் அட் யாஹூ. காம்என்று கூறியுள்ளனர்.
இந்த இணைய தளம் நேற்று மாலை 6.30 மணிக்கு மீண்டும் தானாக இயங்க ஆரம்பித்தது.
கடந்த 2 மாதங்களாக இவ்வாறு இணையதளங்களை முடக்கிவைப்பது தொடர்ந்து வருகிறது. இது போன்றசெயல்களில் தீவிரவாதக் கும்பல்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. இவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தின் வழங்கறிஞர் சங்க வெப்சைட், ஆதித்யா பிர்லாவின் வெப்சைட் உட்பட 12 இணைய தளங்களைஇவ்வாறு முடக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.