சிக்கன நடவடிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் 10 சதவீத பயணப் படி "கட்"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நிதி நெருக்கடி காரணமாக தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயணப் படியில் 10 சதவீதம் ரத்துசெய்யப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழக அரசில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியை அடுத்து, பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசுமேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் "மடியில்" கை வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் பயணமற்றும் மருத்துவச் செலவுகளில் 10 சதவீதம் வெட்டப்படுகிறது.

மேலும் இவர்களுக்காக ரயில்களில் அளிக்கப்பட்டு வந்த முதல் வகுப்பு பயணச் சலுகையும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. சாதாரண வகுப்பு டிக்கெட்டில்தான் அவர்கள் இனிமேல் பயணம் செய்ய முடியும்.

விமானத்திலும் இவர்கள் சொகுசு பயணம் செய்ய முடியாது. ரூ.22,400 அடிப்படை சம்பளம் வாங்குபவர்கள்மட்டுமே சொகுசு பயணம் செய்ய முடியும்.

இவற்றுக்காக இதுவரை ஆண்டு தோறும் ரூ.172 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது அரசுமேற்கொண்டுள்ள சிக்கன நடவடிக்கை காரணமாக இது ரூ.50 கோடியாகக் குறைக்கப்படும் என்று அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+