பொடோவுக்கு அதிமுக ஆதரவு: திமுகவுக்கு ஏன் பயம்? - ஜெ.
சென்னை:
பொடோ சட்டம் தொடர்பாக பாரதீய ஜனதாக் கட்சி அரசுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதால் திமுக ஏன்பயப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக உள்ளாட்சிநிர்வாகிகளை ஜெயலலிதா திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பொடோ சட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளைப் பொறுத்து பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு தரும் என்று அதிமுகஅறிவித்துள்ளது.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் மீதுள்ள வழக்குகளை தள்ளுபடிசெய்வதற்காகவே பா.ஜ.க. அரசுடன் நாங்கள் நெருக்கம் வைத்துக் கொள்ள முயல்வதாக கூறியுள்ளார்.
இது ஒரு தேவையில்லாத கருத்தாகும். இதற்கு பதில் சொல்லக் கூடத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
பொடோ சட்டத்தை அதிமுக ஆதரிப்பது ஏன் என்பதற்குரிய காரணங்களை தெளிவாக கூறியுள்ளேன்.அப்படியிருந்தும் கருணாநதி இப்படி அலறுவது, பயப்படுவது ஏன் என்று தெரியவில்லை என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications