For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திர தலைமை நீதிபதியானார் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன்

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்:

தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இன்று(திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.

ராஜ் பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆந்திரப் பிரதேச ஆளுனர் டாக்டர் சி. ரங்கராஜன் இவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 1942ம் ஆண்டு மார்ச் 22ல் பிறந்த நீதிபதி லட்சுமணன், 1968ல்வழக்கறிஞரானார். நீதிபதி ஜி. ராமானுஜத்திடம் உதவியாளராக இருந்தவர் நீதிபதி லட்சுமணன்.

1989ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டிலேயேஜூன் மாதம் நீதிபதியாகவும் பதவியேற்றார்.

பின்னர் சென்னையிலிருந்து 1997ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நீதிபதி லட்சுமணன், கடந்தமே 2000லிருந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்து வந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X