மர்மமான முறையில் இறந்த மன நோயாளி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மன நோயாளி மர்மமான முறையில்இறந்து கிடந்தார்.
தமிழகத்தில் சமீபத்தில் ஏர்வாடி பகுதியில் பல மன நோயாளிகள் திடீர் தீவிபத்தில் பரிதாபமாக கருகி இறந்ததுபெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து ஏர்வாடி பகுதியில் குடிசைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமன நோயாளிகள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மன நோயாளிகளுக்குத் தனிப் பிரிவு உள்ளது.
இங்கு அடைக்கப்பட்டிருந்த ஒரு மன நோயாளி சில நாட்களுக்கு முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்துகிடந்தார். அவரது கழுத்து துணியால் நெரிக்கப்பட்டுள்ளது.
மன நோயாளியின் மர்ம சாவு குறித்து மருத்துவனை முதன்மை மன நல மருத்துவர் விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications