For Quick Alerts
For Daily Alerts
Just In
மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் காங். ஆர்ப்பாட்டம்
சென்னை:
பொடோ சட்டம் கொண்டு வருவதை எதிர்த்தும், ஜார்ஜ் பெர்னாண்டசை மீண்டும் பாதுகாப்புத் துறைஅமைச்சராக்கியதைக் கண்டித்தும் சென்னையில் காங்கிரஸ் சேவாதளம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை பூங்கா நகர் தலைமை தபால் நிலையம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் துவக்கி வைத்தார்.
முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மற்றும் அவரது தம்பியும் வர்த்தக காங்கிரஸ் தலைவருமான வசந்த குமார்உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சராக ஜார்ஜ் பெர்னாண்டசை நியமித்தது, பொடோ சட்டம் ஆகியவற்றின் காரணமாக மக்கள்நம்பிக்கையை மத்திய அரசு இழந்து விட்டது. எனவே மத்திய அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்என்று இளங்கோவன் பேசினார்.
Comments
Story first published: Monday, November 26, 2001, 5:30 [IST]