For Daily Alerts
Just In
14,000 பஸ் ஊழியர்கள் விடுதலை: டி.ஜி.பி.
சென்னை:
கைது செய்யப்பட்டுள்ள பஸ் ஊழியர்களில் இதுவரை 14,000 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக மாநில டிஜிபிநைல்வால் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பஸ் ஊழியர்கள் அனைவரும் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை 14,000 பேர்விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், பஸ்களை உடைத்தது உள்பட சில வழக்குகளில் கைதாகி 15 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பஸ்ஊழியர்கள், தண்டனைக் காலம் முடிந்த பிறகுதான் விடுதலை செய்யப்படுவர் என்றார் நைல்வால்.
Comments
Story first published: Monday, November 26, 2001, 5:30 [IST]